
கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்கள் மற்றும் லெபனான் பிரதமர் டாக்டர் நவாஃப் சலாம் ஆகியோர் இன்று காலை அமீரி திவானில் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது, அல் உதைத் விமானத் தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலை லெபனான் பிரதமர் கடுமையாகக் கண்டித்து, இது கத்தாரின் இறையாண்மையை மீறும் செயல் என தெரிவித்தார்.
லெபனான் மக்களின் அமைதி, வளர்ச்சி மற்றும் நலனுக்காக கத்தார் தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கும் என அமீர் அவர்கள் உறுதியளித்தார்.