
தென்கொரியாவில் ஜனாதிபதியாக செயல்பட்ட யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அவசர நிலை அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைக்கால ஜனாதிபதியாக ஹான் டக் சூ (Han Duck-soo) நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் லி ஜே மியுங் (Lee Jae-myung) வெற்றிபெற்றார். இதையடுத்து அவர் அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்றப்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய லி ஜே மியுங், வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை, வடகொரியா அத்துமீறி செயல்பட்டால் அமெரிக்காவுடனான ராணுவ நட்பு மூலம் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்