Sri Lanka News

கட்சிகளுடன் இணைந்தால் மட்டுமே தலைவர் பதவி – கந்தளாய் ஐ.ம.ச உறுப்பினர்கள் நம்பிக்கை..!

கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டால் மட்டுமே கந்தளாய் பிரதேச சபையின் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பிரதேசசபையில் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத சூழலில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இன்று (ஜூன் 8) கந்தளாய் பகுதியில் ஒன்றுகூடி கலந்துரையாடல் நடத்தினர்.

இந்த கலந்துரையாடலின் முடிவில், ஒருமித்த செயற்பாட்டுக்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேச சபையில் மொத்தம் 21 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் தேசிய மக்கள் சக்தியில் 10 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் 11 உறுப்பினர்கள் என மொத்தமாக 21 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதன் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட்டால், தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது இந்தக் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கந்தளாய் பிரதேசசபையின் தலைவராக பதவியேற்கலாம் என அந்தக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது இலங்கை அரசை வழிநடத்தும் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கந்தளாய் பிரதேச சபையில் குறைவான பிரதிநிதித்துவத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button