Sri Lanka News

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சேதப்படுத்திய நபர் விளக்கமறியலில்

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

33 வயதுடைய குறித்த நபர் கடந்த தினம் களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button