சர்வதேச கிரிக்கெட்டுக்கு வைபவ் சூர்யவன்ஷி தயார் – குமார் சங்கக்கார

ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய இளம் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டுக்கு முற்றிலும் தயாராகிவிட்டதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று 2 இல் ராஜஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை சூர்யவன்ஷி எதிர்கொண்ட விதம் அற்புதம் என்றும், விரைவில் அவருக்கு இந்திய தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், சமூக வலைத்தளங்களின் விமர்சனங்கள் மற்றும் வெளி அழுத்தங்கள் இந்த இளம் வீரரை பாதிக்காதவாறு ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்வாகம் பாதுகாத்து வருவதாகவும் சங்கக்கார கூறினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 776 ஓட்டங்களைக் குவித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, தற்போது அதிக ஓட்டங்களை எடுத்தவருக்கான Orange Cap வரிசையில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




