அசாமில் இந்திய விமானவிபத்தில் 5 வீரர்கள் பலி

- துணை விமானிக்கு தீவிர சிகிச்சை
அசாமில் இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான AN-32 போக்குவரத்து விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உயிர் பிழைத்துள்ள ஒரு துணை விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமா? அல்லது மோசமான வானிலை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சோவியத் யூனியனால் முதலில் தயாரிக்கப்பட்ட இந்த ரக விமானங்களில் சுமார் 100 விமானம் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது.
AN-32 ஆனது கடுமையான சூழல்களில் சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உயரமான விமான நிலையங்களிலும் வெப்பமான வெப்பமண்டல காலநிலைகளிலும் கச்சிதமாகச் செயல்படுகிறது.
இதனால் 7.5 டன் சரக்கு, 50 பயணிகள் அல்லது 42 வான்குடை வீரர்களை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், இது தொலைதூரப் பகுதிகளில் பொருட்களை விநியோகம் செய்வதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.




