Sri Lanka NewsWorld News

ஜப்பானிடமிருந்து 1.33 மில்லியன நிதி உதவி

டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று முன்தினம் (29) கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கையெழுத்தானது.

இந்தத் திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வழங்கவுள்ளது.

இவ்வொப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமடா (Akio Isomata) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி விம்லேந்திர சரண் (Vimlendra Sharan) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நீர்நிலைகளில் 200 மீன் கூடுகள் (Fish Cages) அமைக்கப்படவுள்ளன.

தொடர்புடைய நீர்நிலைகளுக்குத் தேவையான மிதக்கும் வலை அமைப்புகளை வழங்குவதற்கும், கிழக்கு மாகாணத்தின் இங்கிநியாகல மீன் இனப்பெருக்க மையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான ஹார்மோன்கள் மற்றும் இரசாயனப் பொருட்களை வழங்குவதற்கும் இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மீனவர் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இந்த மீன் கூடுகள் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை நடத்துவதும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முதலாவது மீன் வளர்ப்புச் சுற்றுக்குத் தேவையான மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் இலவசமாக வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button