Sri Lanka News

இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே விசேட கலந்துரையாடல்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தனது ‘எக்ஸ்’ (X) கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், தற்போதைய நிலைமை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சருக்குத் தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமான ஒன்றாக அமைந்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button