World News

ஈரானிடம் அமெரிக்காவின் ‘நிபந்தனைப் பட்டியல்’: தூது சென்றது பாகிஸ்தான்!

அமெரிக்கா முன்வைத்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய ஆவணமொன்றைப் பாகிஸ்தான் ஈரானிடம் கையளித்துள்ளதாக அல் ஜசீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள அல் ஜசீரா ஊடகம், ட்ரம்ப் நிர்வாகத்தினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணமே இவ்வாறு ஈரான் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தற்போது குறித்த கோரிக்கைகள் தொடர்பான ஈரானின் பதிலுக்காகப் பாகிஸ்தான் காத்திருப்பதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலைத் தணிப்பதற்காகப் பாகிஸ்தான் இங்கு ஒரு மத்தியஸ்தராகச் செயற்பட்டு வருகின்றது.

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, அடுத்த சில நாட்களில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையிலான நேரடி சந்திப்பொன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button