Sports

எதிர்வரும் மார்ச் ஆரம்பமாகவுள்ள இலங்கை -ஆப்கான் கிரிக்கெட் தொடர்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளன.

இதன்படி, மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடர் மார்ச் 13 ஆம் திகதி சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் மார்ச் 15 மற்றும் 17 ஆம் திகதிகளில் சார்ஜாவில் நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் மாதம் 20 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் அதே மாதம் 22 மற்றும் 25 ஆம் திகதிகளில் டுபாயில் நடைபெறுவுள்ளன.

இந்த கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button