Sri Lanka News

தெல்தெனிய அதிர்ச்சிப் பின்னணி: காதலியின் உடலை காரில் ஏற்றிச் சென்ற காதலன்! வெளியான திடுக்கிடும் CCTV காட்சி!

குறித்த பெண் தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் நுவரெலியா பகுதியிலுள்ள விடுதியொன்றிற்கு நேற்று முன்தினம் சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த காதலன் அந்தப் பெண்ணின் உடலத்தை அன்றைய தினம் இரவே சிற்றூந்தில் ஏற்றி, நேற்று காலை தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த பெண்ணும் அவரது காதலனும் தங்கியிருந்த விடுதியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து குறித்த பெண்ணைத் தூக்கிச் சென்று சிற்றூந்தில் ஏற்றிச் சென்றதாக, விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அப்பெண்ணின் மூத்த சகோதரர் நுவரெலியா காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அதனடிப்படையில், நுவரெலியா தடயவியல் காவல்துறையினரின் உதவியுடன் குறித்த இருவரும் தங்கியிருந்த தனியார் விடுதியின் தடயங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள், மற்றும் தொலைபேசி அழைப்புத் தரவுகளைச் சேகரித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button