பராகுவேயை 4-1 என வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி!

2026 பிபா (FIFA)உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகளுக்கிடையிலான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில்அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது.
அந்த அணி முதலாவது பாதியில் விளாசிய மூன்று கோல்களின் உதவியுடன் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பராகுவே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், உலகக் கிண்ண போட்டியொன்றில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட கோல் வித்தியாசத்தில் அமெரிக்க அணி தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
போட்டியின் 7-வது நிமிடத்தில் எதிரணியினர் அடித்த ‘ஓன் கோல்’ (Own goal) அமெரிக்காவிற்கு முன்னிலையை வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, முதலாவது பாதியின் இறுதி நொடியில் அடிக்கப்பட்ட கோல் உட்பட, அந்த அணியின் முன்கள வீரர் போலரின் பலோகன் (Folarin Balogun) இரண்டு கோல்களை அடித்தார்.
இது அமெரிக்க அணியின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ஆட்டங்களில் ஒன்றாக அமைந்ததோடு, அணிக்கு ஒரு வலுவான முன்னிலையையும் தேடித்தந்தது.
போட்டியின் இரண்டாவது பாதியில் பராகுவே அணி ஒரு கோல் அடித்து மீள முயற்சித்த போதிலும், ஆட்டத்தின் இறுதிப் பகுதியான 98-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஜியோ ரெய்னா (Gio Reyna) ஒரு கோல் அடித்து, மீண்டும் கோல் வித்தியாசத்தை மூன்றாக உயர்த்தினார்.
போட்டியின் இறுதி முடிவில் பராகுவே அடித்த அந்த ஒரு கோல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், குழு நிலைப் போட்டிகளின் (Group stage) இறுதியில் அந்த அணியின் கோல் வித்தியாசத்திற்கு (Goal differential) அது மிகவும் முக்கியமானதாக அமையலாம்.
ஏனெனில், 12 குழுக்களில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் சிறந்த 8 அணிகள் அடுத்த சுற்றான ‘சுற்று 32’ (Round of 32) பகுதிக்கு தகுதி பெறும். அமெரிக்க அணியின் இந்த பிரம்மாண்ட வெற்றியில் ஏதேனும் பின்னடைவு இருப்பதாகக் கருதினால், அது கிறிஸ்டியன் புலிசிக்கின் (Christian Pulisic) உடல்நலம் குறித்த கவலையாகவே இருக்க முடியும்.
முதலாவது பாதியில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்த அமெரிக்க நட்சத்திர வீரர், இடைவேளையின் போது மைதானத்திலிருந்து வெளியேறினார்.
புலிசிக் முதலாவது பாதியில் காயம் அடைந்தாரா அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வெளியேற்றப்பட்டாரா என்பது குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.




