Sri Lanka News

தங்கம், வாகனக் கடன்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: இலங்கை மத்திய வங்கி அதிரடஉத்தரவு

நாட்டின் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கான வரம்புகளைக் கட்டுப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பூகோள அரசியல் மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை, நாணய மாற்று வீத ஏற்ற இறக்கங்கள் மற்றும் வாகன இறக்குமதி மீதான கூடுதல் கட்டணத்தால் வாகன விலைகள் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் வருமாறு:உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மதிப்பு விகிதம் (LTV) 70 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் புதுப்பிக்கப்படும் பழைய கடன்களுக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தும்.

மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான தற்போதைய அதிகபட்ச கடன் மதிப்பு வரம்புகள் (LTV limits) மேலும் 10 சதவீத புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன.

தங்கம் மற்றும் வாகனக் கடன்கள் அண்மைக்காலமாக மிக வேகமாக அதிகரித்து வருவதால், அது நிதி அமைப்பில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த ‘மெக்ரோபிரூடென்ஷியல்’ கொள்கை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button