Sri Lanka News

பாடசாலை விழாக்கள் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் – கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!

பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, செலவுகளைக் ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.

பாடசாலை நிகழ்வுகளுக்காகப் பெற்றோர்களிடமிருந்து அதிகப்படியான பணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

எதிர்காலத்தில் நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் மிகவும் எளிமையான முறையிலும், குறைந்த செலவிலும் நடத்தப்பட வேண்டும்.

இதற்கு முன்னர் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து, சில பாடசாலைகள் இன்னும் ஆடம்பரமான முறையில் விழாக்களுக்காக அதிக நிதியைச் செலவிடுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை நிதி முகாமைத்துவம் தொடர்பான 54/2023 இலக்கச் சுற்றுநிருபம் மற்றும் அது சார்ந்த ஏனைய நிதி விதிமுறைகளை அதிபர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என நினைவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button