Sri Lanka News

பாடசாலைகளில் வலுசக்தியை பாதுகாக்க விசேட திட்டம்

பாடசாலைகளுக்குள் வலுசக்தி சேமிப்பு கலாசாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ‘சுரகிமு லங்கா’ பாடசாலை வலுசக்தி பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் வலுசக்தி பயன்பாட்டை வினைத்திறனாக்கி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேற்றுத்தன்மையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்றினை வெளியிடவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, முதலாம் தவணை முடிவில் பாடசாலை விடுமுறை வழங்கப்படுவதற்கு முன்னர் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறான தினமொன்றில் இதனை முன்னெடுப்பது நடைமுறை ரீதியாக கடினமாக இருக்கும் பட்சத்தில், அதற்குப் பொருத்தமான வேறொரு தினத்தைப் பயன்படுத்துமாறு அதிபர்கள் மற்றும் பாடசாலை பிரதானிகளுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button