Sri Lanka News
எஹலியகொடவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

எஹலியகொட, வலவிட்டவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கெட்டஹெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் இந்த கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




