Sri Lanka News

டெங்கு தொற்று தீவிரம்: 28,000-ஐ கடந்த நோயாளர்கள் – 15 உயிரிழப்புகள் பதிவு

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு தொற்றினால் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மருத்துவர் பிரஷீலா சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் டெங்கு பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அகற்றுவதற்கும், டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள நீர், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் மற்றும் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button