World News

அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர வெடிப்பு!

அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் ஒன்றான சால்மெட் (Chalmette) ஆலையில் ஏற்பட்ட பிரம்மாண்ட வெடிப்புச் சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது.

ஒரு நாளைக்கு 1,85,000 பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் இந்த மாபெரும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து, தற்போது அப்பகுதியையே கறுப்புப் புகைய மண்டலமாக மாற்றியுள்ளது.

ஆலைக்கு அருகே சென்றுகொண்டிருந்த வாகனத்தின் டாஷ் கேமில் (Dash Cam) இந்த விபத்தின் கோரமான காட்சிகள் பதிவாகியுள்ளனதிடீரென வானை முட்டும் அளவிற்கு ஒரு பிரம்மாண்ட தீப்பிழம்பு வெடித்துச் சிதறுவதும், அதைத் தொடர்ந்து கரும்புகை சூழ்வதும் அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

இந்த ஆலை அமெரிக்காவின் எரிசக்தி தேவையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது:நாளொன்றுக்கு 1,85,000 பேரல்கள் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு, சர்வதேச எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஒருபுறம் வளைகுடாவில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், அமெரிக்காவிற்குள் அமைந்துள்ள இந்த மாபெரும் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்டுள்ள விபத்து, எரிசக்தி பாதுகாப்பிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button