News

இலங்கை வந்தடைந்தார் வியட்நாம் ஜனாதிபதி – வரவேற்பு நிகழ்வு ஆரம்பம்

வியட்நாம் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

வியட்நாம் ஜனாதிபதியும் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றையதினம் இரவு இவர்கள் வந்டைந்தனர்.

அவருடன் 209 பேரைக் கொண்ட தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

இந்தியாவின் மும்பை நகரிலிருந்து வியட்நாம் ஏர்லைன்ஸிற்கு (Vietnam Airlines) சொந்தமான VN-1 எனும் விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்நிலையில் வியட்நாம் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button