Sports

LPL: வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம் (08) ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை இதற்காகப் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.srilankacricket.lk ஊடாக இந்த இணையவழிப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

லங்கா பிரீமியர் லீக் தொடரை நாட்டின் நான்கு பிரதான மைதானங்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மற்றும் ஆர். பிரேமதாச மைதானம், கண்டி பல்லேகல மற்றும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடர் எதிர்வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button