News

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதத்தால் அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை சுமார் 6 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர் பதிவான மிக மோசமான மோதல் நிலைமை இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 6.3 சதவீதத்தால், அதாவது 6.79 அமெரிக்க டொலர்கள் அதிகரித்து 114.96 டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 4.2 சதவீதத்தால், அதாவது 4.23 அமெரிக்க டொலர்கள் அதிகரித்து 106.17 டொலர்களாக உயர்ந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button