Sri Lanka News

முறையாக லாஃப் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- மக்கள் கோரிக்கை !

நுவரெலியா கண்டி மாவட்டங்களில் பாவனையாளர்களுக்கு லாஃப் எரிவாயு முறையாக கிடையாது என இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வர்த்தக அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் இப் பகுதியில் உள்ள பாவனையாளர்கள் என கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த பல மாதங்களாக கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் முறையாக லாஃப் எரிவாயு கிடையாது.

இதன் காரணமாக லாஃப் எரிவாயு வெற்று சிலிண்டர் வைத்து கொண்டு உள்ளவர்கள் ஏனைய லித்ரோ எரிவாயு போன்றவற்றை கொள்வனவு செய்ய முடியாது உள்ளது.

லாஃப் எரிவாயு முறையாக பாவனையாளர்களுக்கு வழங்க முடியாது எனில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து லாஃப் எரிவாயு வெற்று சிலிண்டர்களை பெற்று கொண்டு லித்ரோ எரிவாயு பாவனைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button