Sri Lanka News

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பூர்வமான முதன்மைப் பதிவு இல்லாத வாகனமொன்றுக்கு இலக்கத் தகடுகளை விநியோகித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டின் கீழ், இன்று (28) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பத்தரமுல்லை சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றி வரும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button