போர் நிறுத்தத்திற்கு நடுவே தாக்குதல்- லெபனானில் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்!

10 நாள் தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் நிலையிலும், தெற்கு லெபனானின் கஃபர்கேலா (Kafr Kela) பகுதியில் தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த ஏவுகணை செலுத்தி (Missile Launcher) ஒன்றை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) இரவோடு இரவாகத் தாக்கி அழித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவத் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி,
கஃபர்கேலா பகுதியில் குண்டுகள் நிரப்பப்பட்டு, வடக்கு இஸ்ரேலிய குடியிருப்புகளை நோக்கி ஏவுவதற்குத் தயாராக இருந்த ஏவுகணை செலுத்தியை ராணுவ உளவுத்துறை கண்டறிந்தது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, அந்த ஏவுகணை ஏவப்படுவதற்கு முன்னரே வான்வழித் தாக்குதல் மூலம் அது துல்லியமாகத் தரைமட்டமாக்கப்பட்டது.
தெற்கு லெபனானில் அமைந்துள்ள பாதுகாப்பு அரணுக்கு வடக்கே இந்தத் தளம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
கஃபர்கேலா பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் (Drones) தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் முழு அளவிலான மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.




