Sri Lanka News

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது

நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் ஒரு ஜெனரேட்டர் அலகு நிறுத்தப்பட்டுள்ளது.

நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், மின்சார தேவை குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அலகுகள் மூலம் மின்னுற்பத்தி தொடர்ந்து நடைபெறுகிறது.

இலங்கையின் தேசிய மின்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் லக்விஜய அனல்மின் நிலையம் மூன்று முக்கிய ஜெனரேட்டர் அலகுகளைக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு அலகும் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் மொத்த திறன் 900 மெகாவாட்டாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button